சுயநலம் – II

இடி வந்தால்
காதை மூடுகிறான்
மின்னல் வந்தால்
கண்ணை மூடுகிறான்
மழை மட்டும்
வந்தால் மகிழ்கிறான்
சுயநலம் பார்த்தே
பழகிய மனிதனின்
முகம் கூட பார்க்காமல்
பொழிகிறது வானம்

பின்னூட்டமொன்றை இடுக