மண்ணை தீண்டாமல்
என்னை தீண்டிய
மழைத்துளிகள்
கண்ணை மட்டும்
தழுவாமல் போன
காலைத்தென்றல்
வாசல் கடந்தால்
வருகை தரும்
வெய்யில் வருடல்
உறவும் உரிமையும்
மாயைகளாய் மாற்றும்
மழலை சிரிப்பு
எதையும் உணராது
நிற்காமல் போனால்
பாவமல்லவா
தினம் தினம்
இப்படித்தான்
என்னிடம் பேச
கடவுள் வருகிறார்