எத்தனை சுகங்கள்
எத்தனை வரங்கள்
கொஞ்சம் கற்கள் தூவும்
சர்க்கரை கணங்கள்
எழுவோருக்கும் அழகுண்டு
விழுவோருக்கும் மதிப்புண்டு
எல்லோருக்கும் நிறைவுண்டு
தொலைந்தாலும் இங்கே வழியுண்டு
பரிசாக வரும் பாலைவனம்
ஏற்றுக்கொண்டால்
வாழ்வை நிரப்பும்
பூங்காவனம்
அழகாய் தொடரும்
பாதை ஒன்று
அதன் தொடக்கத்தில் சில
முட்கள் உண்டு
மனிதனாய் பிறப்பது
ஆசி ஆகும்
அந்த ஆசியிலே இது
அதிர்ஷ்ட்டம் ஆகும்
அன்பு உன்னில் வளர்ந்தால்
நாளை மண்ணில் பரவும்
இதை மெய்யென்று தானே
உணரவில்லை எவரும்