நான் ரசித்த எந்த இசையும்
ஈடாகவில்லை
நீ மண்ணுடன் சேரும் ஒலி
மணதில் செய்த மாயம்
வெடிகளும் அழகாகுமா
நீ சுவற்றில் விழுந்து
வெடித்து சிதறும் போது
உன் புகழை பாடி
எத்தனை கவிதைகள்
என்ன புண்ணியம் செய்ததோ
உன்னை பெற்றெடுத்த மேகம்
இறைவன் வரைந்த கோடுகளாய்
நீ தோன்றும் நேரங்களில்
அதில் எழுதி பார்க்க
இதயத்தில் ஆயிரம் வரிகள்
கோடையில் நீ செல்லபில்லை
உன் செய்கைகளை
சிலர் கோபித்து கொண்டாலும்
உன்னை வெறுக்க
யாருக்கும் மணம் இல்லை
கண்கள் கான ஏங்கும் பயணம் நீ
முடிந்து போகும் போது
ஏனோ மணதில்
ஒரு சின்ன சோகம்
நீ மறைந்தாலும்
நீ தந்த சுகம் மறையாது
மண்ணிலும்
என் மணதிலும்